தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

பீகார் தேர்தல், 2025: தேர்தலுக்கு முந்தைய மற்றும் வாக்குப்பதிவு நாளில் அச்சு ஊடக விளம்பரங்களுக்கு எம்சிஎம்சி மூலம் முன்கூட்டிய சான்றிதழ் பெறுதல்

प्रविष्टि तिथि: 21 OCT 2025 9:45AM by PIB Chennai
  1. 2025 பீகார் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான அட்டவணையையும், 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு  தேதி நவம்பர் 6, 2025 (வியாழக்கிழமை), நவம்பர் 11, 2025 (செவ்வாய்க்கிழமை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  2. நியாயமான பிரச்சார சூழலை உறுதி செய்வதற்காக, எந்தவொரு அரசியல் கட்சியோ, வேட்பாளரோ, அமைப்போ அல்லது தனிநபரோ, தேர்தல் நாளிலும், தேர்தல் நாளுக்கு ஒரு நாள் முன்பும், மாநில/மாவட்ட அளவில் ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு (எம்சிஎம்சி) மூலம்  உள்ளடக்கங்களுக்கு முன்கூட்டியே சான்றளிக்கப்படாமல், அச்சு ஊடகங்களில் எந்தவொரு விளம்பரத்தையும் வெளியிடக்கூடாது.
  3. பீகாரைப் பொறுத்தவரை, கட்டுப்படுத்தப்பட்ட  நாட்கள் நவம்பர் 5 & 6, 2025 (கட்டம்-I) மற்றும் நவம்பர் 10 & 11, 2025 (கட்டம்-II).
  4. அச்சு ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு முன்கூட்டிய சான்றிதழ் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், விளம்பரம் வெளியிடுவதற்கு உத்தேசிக்கப்பட்ட தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக எம்சிஎம்சி இடம் விண்ணப்பிக்க வேண்டும்.
  5. சரியான நேரத்தில் முன்கூட்டிய சான்றிதழ் பெறுவதை எளிதாக்க, மாநில/மாவட்ட அளவிலான எம்சிஎம்சிகள் அத்தகைய விளம்பரங்களை ஆய்வு செய்து முன்கூட்டியே சான்றிதழ் அளித்து, விரைவாக முடிவுகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன.

***

(Release ID: 2181069)

SS/SMB/SH


(रिलीज़ आईडी: 2181200) आगंतुक पटल : 606
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu , Malayalam