பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜமாதா விஜயராஜே சிந்தியாவின் பிறந்தநாளில் பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 12 OCT 2025 9:10AM by PIB Chennai

ராஜமாதா விஜயராஜே சிந்தியாவின் பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

ராஜமாதா விஜயராஜே சிந்தியா, தமது வாழ்நாள் முழுவதும் சமூகத்திற்கு சேவை செய்ய மேற்கொண்ட முயற்சிகள் என்றென்றும் நினைவில் இருக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

விஜயராஜே சிந்தியா, இந்தியாவின் கலாச்சார வேர்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் என்பதை திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் பாரம்பரியங்களையும் மதிப்புகளையும் பாதுகாப்பதில் தமது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் அவர் செயல்பட்டதாகவும், நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தைப் பிரபலப்படுத்த அவர் தொடர்ந்து பாடுபட்டார் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"ராஜமாதா விஜயராஜே சிந்தியாவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். சமூகத்திற்கு சேவை செய்ய அவர் மேற்கொண்ட முயற்சிகள் எப்போதும் நினைவில் கொள்ளப்படும். ஜனசங்கத்தையும், பிஜேபி-யையும் வலுப்படுத்துவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். விஜயராஜே சிந்தியா, நமது கலாச்சார வேர்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவற்றைப் பாதுகாக்கவும் பிரபலப்படுத்தவும் தொடர்ந்து பாடுபட்டார்."

*****

 

(Release ID: 2177981)

AD/PLM/SG

 

 


(रिलीज़ आईडी: 2178044) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam