மத்திய அமைச்சரவை
அசாம், திரிபுரா மாநிலங்களின் சிறப்பு மேம்பாட்டுத் தொகுப்புகளுக்கு ரூ.4,250 கோடி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
08 AUG 2025 4:05PM by PIB Chennai
அசாம், திரிபுரா மாநிலங்களுக்கு மத்திய சிறப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நான்கு புதிய கூறுகளின் செலவுக்கு ரூ.4,250 கோடி வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முன்மொழியப்பட்ட நான்கு புதிய கூறுகளின் ஒட்டுமொத்த செலவு ரூ.7,250 கோடியாக இருக்கும். இதில் அசாம் சிறப்பு மேம்பாட்டுத் தொகுப்புகளின் மத்திய துறை திட்டத்திற்கு ரூ.4000 கோடியும் மற்றும் திரிபுராவுக்கு ரூ.250 கோடியும் மத்திய அரசு வழங்கும். எஞ்சியுள்ள தொகையில் ரூ.3,000 கோடி அசாம் மாநில அரசால் அதன் வளங்களிலிருந்து வழங்கப்படும்.
மத்திய அரசும், அசாம் மற்றும் திரிபுரா மாநில அரசுகளும் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் இனக்குழுக்களுடன் கையெழுத்திட்ட தீர்வு ஒப்பந்தத்தின்படி, ரூ.4,250 கோடியில், 205-26 நிதியாண்டு முதல் 2029-30 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.4,000 கோடி அசாமின் மூன்று கூறுகளுக்கும், 2025-26 நிதியாண்டு முதல் 2028-29 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு ரூ.250 கோடி திரிபுராவின் ஒரு கூறுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள் வேலைவாய்ப்பை உருவாக்கும். திறன் மேம்பாடு, வருவாய் உருவாக்கம் மற்றும் உள்ளூர் தொழில்முனைவு மூலம் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்குப் பயனளிக்கும். பாதிக்கப்பட்ட சமூகங்களை நிலைத்தன்மை மற்றும் மைய நீரோட்டத்திற்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2154123
*****
SMB/SG
(Release ID: 2154297)
Read this release in:
Telugu
,
English
,
Khasi
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam