ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், சுய உதவிக்குழுக்களின் பெண் உறுப்பினர்களுடன் மெய்நிகர் முறையில் கலந்துரையாடினார்

प्रविष्टि तिथि: 07 AUG 2025 5:49PM by PIB Chennai

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான், புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் இருந்து, லட்சக்கணக்கான சுய உதவிக்குழுக்களின்  பெண் உறுப்பினர்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி, ஊரக வளர்ச்சி செயலாளர் திரு. சைலேஷ் குமார் சிங் மற்றும் பிற மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்வின் போது, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர், தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம் (NRLM) காரணமாக அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றத்தை சுட்டிக்காட்டினர். இந்த இயக்கம் பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களின் சமூக அந்தஸ்தையும் மேம்படுத்துகிறது என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.

 

உள்ளூர் கலை மற்றும் கலாச்சாரத்தை மீட்டெடுப்பதில் சுய உதவிக்குழு பெண்களின் பங்கை அமைச்சர் திரு சவுகான் பாராட்டினார், அவர்களின் படைப்புகள் இந்தியாவின் கலாச்சார அடையாளத்தின் ஒரு முக்கிய பகுதியாகும் மற்றும் நாட்டுப்புற மரபுகளை வெளிப்படுத்த உதவுகின்றன என்று கூறினார். சந்தைப்படுத்தல் மற்றும் பிராண்டிங் தொடர்பாக பெண்கள் எழுப்பிய கவலைகளையும் அவர் கேட்டுக்கொண்டு, வடிவமைப்பு சார்ந்த பயிற்சி உட்பட உறுதியான நடவடிக்கையை அவர்களுக்கு உறுதி செய்தார். போட்டித்தன்மையுடன் இயங்க, உயர் தயாரிப்பு தரத்தை பராமரிக்க சுய உதவிக்குழு உறுப்பினர்களை அவர் ஊக்குவித்தார்.

 

உள்நாட்டு தயாரிப்புகளை ஏற்றுக்கொள்வதை ஆதரிக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் வேண்டுகோளை திரு சவுகான் மீண்டும் வலியுறுத்தினார், தனிப்பட்ட செயல்பாடுகளில்கூட தேசிய நலன்களில் எந்த சமரசமும் செய்யப்படாது என்று உறுதியளித்தார். குடிமக்கள் 'தேசத்திற்கு முன்னுரிமை' அளித்து, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ஆதரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

சுய உதவிக்குழுப் பெண்கள் நிதி சுதந்திரம் அடைவதைக் கொண்டாடும் வகையில், இந்த இயக்கத்தின் கீழ் 1.5 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ₹1 லட்சத்திற்கு மேல் சம்பாதித்து, 'லட்சாதிபதி சகோதரிகள்' ஆனதாக திரு. சவுகான் குறிப்பிட்டார். விரைவில் 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்றும் நோக்கத்துடன், 2 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற அரசு செயல்பட்டு வருகிறது. 'சுதேசி' உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், ரக்ஷா பந்தன் போன்ற பண்டிகைகளின் போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கவும் குடிமக்களை அமைச்சர் வலியுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2153708

 

***

(Release ID: 2153708)

AD/SM/RB/DL


(रिलीज़ आईडी: 2153955) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Nepali , हिन्दी , Marathi , Gujarati , Odia , Malayalam