பிரதமர் அலுவலகம்
பீகார் மாநிலம் மோதிஹரியில் சுவாமி சக்தி ஷரணானந்த் சரஸ்வதி ஜி மகராஜை பிரதமர் சந்தித்தார்
Posted On:
18 JUL 2025 9:40PM by PIB Chennai
பீகார் மாநிலம் மோதிஹரியில் பிரதமர் திரு நரேந்திர மோடி சுவாமி சக்தி ஷரணானந்த் சரஸ்வதி ஜி மகராஜை இன்று சந்தித்தார். மகராஜ் அவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்ற பிரதமர் மோடி, அவருடைய இணக்கம், பாசம் மற்றும் வழிகாட்டுதலுக்காக நன்றி தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் எழுதியிருப்பதாவது:
“மோதிஹரியில் இன்று நான் சுவாமி சக்தி ஷரணானந்த் சரஸ்வதி ஜி மகராஜிடம் ஆசிர்வாதம் பெறும் நற்பாக்கியம் அடைந்தேன். அவருடைய ஆளுமையானது புத்திகூர்மை மிக்கதாகவும், ஆற்றல் மிக்கதாகவும் உள்ளது. அவருடைய பேச்சு முழுவதும் ஆன்மிகம் நிறைந்ததாக இருந்தது. மகராஜ் அவர்களின் இணக்கம், பாசம் மற்றும் வழிகாட்டுதலால் நான் பெருமிதம் அடைகிறேன்.”
***
(Release ID: 2145959)
AD/TS/IR/AG/KR
(Release ID: 2146314)
Visitor Counter : 8
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam