உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் என்எஃப்எஸ்யூ மற்றும் சிஎஃப்எஸ்எல் வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார் - என்எஃப்எஸ்யூ தற்காலிக வளாகத்தை மெய்நிகர் முறையில் திறந்து வைத்தார்
என்எஃப்எஸ்யூ நாடு முழுவதும் 26 முக்கிய இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் - 32,000-க்கும் மேற்பட்ட தடயவியல் நிபுணர்கள் ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கப்படுவார்கள்: திரு அமித் ஷா
Posted On:
22 JUN 2025 7:32PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகம் (NFSU-என்எஃப்எஸ்யூ) மற்றும் மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வக (CFSL-சிஎஃப்எஸ்எல்) வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார், மேலும் ராய்ப்பூரில் என்எஃப்எஸ்யூ தற்காலிக வளாகத்தை மெய்நிகர் முறையில் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது உரையில், அறிவியல் சான்றுகள் இருக்கும்போது மட்டுமே துல்லியமான முடிவுகள் அடையப்படும் என்றும், தடயவியல் அறிவியல் ஆய்வகங்களின் உதவியுடன், தண்டனை விகிதத்தின் அடிப்படையில் இந்தியா விரைவில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக மாறும் என்றும் கூறினார்.
என்எஃப்எஸ்யூ நிறுவப்பட்டதிலிருந்து, மிகக் குறுகிய காலத்தில் 16 வளாகங்கள் தொடங்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். அவற்றில் 7 செயல்பாட்டுக்கு வந்துள்ளன எனவும் 9 அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் மேலும் 10 கூடுதல் வளாகங்கள் தொடங்கப்படும் என்றும் திரு அமித் ஷா கூறினார். நாடு முழுவதும் 26 முக்கிய இடங்களுக்கு என்எஃப்எஸ்யூ-வை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த வளாகங்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தவுடன், வரும் ஆண்டுகளில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 32,000 தடயவியல் நிபுணர்கள் உருவாக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார்.
****
(Release ID: 2138746)
AD/TS/PLM/RJ
(Release ID: 2138755)