குடியரசுத் தலைவர் செயலகம்
சர்வதேச யோகா தினத்தில் மக்களுடன் குடியரசு தலைவர் கலந்து கொண்டார்
Posted On:
21 JUN 2025 6:37PM by PIB Chennai
சர்வதேச யோகா தினமான இன்று (ஜூன் 21, 2025) டேராடூனில் உள்ள உத்தராகண்ட் மாநில காவல் துறை மைதானத்தில் நடைபெற்ற வெகுஜன யோகா நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார்.
யோகா அமர்வுக்குப் பிறகு நிகழ்ச்சியில் சுருக்கமாக உரையாற்றிய அவர், 'சர்வதேச யோகா தினத்தை' முன்னிட்டு உலகம் முழுவதும் யோகா பயிற்சி செய்யும் அனைத்து பங்கேற்பாளர்களையும் வாழ்த்தினார். 2015 முதல், யோகா முழு மனிதகுலத்தின் பொதுவான பாரம்பரியமாக மாறியுள்ளது என்று அவர் கூறினார். இது இந்தியாவின் 'மென்மையான சக்திக்கு' ஒரு முக்கிய எடுத்துக்காட்டு என அவர் தெரிவித்தார்.
யோகா என்பது ஆரோக்கியமான வாழ்க்கையை வாழும் கலை என்றும், அதை ஏற்றுக்கொள்வது ஒரு மனிதனின் உடல், மனம் மற்றும் ஒட்டுமொத்த ஆளுமைக்கும் பயனளிக்கும் என்றும் குடியரசு தலைவர் கூறினார். ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும்போது, குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும். குடும்பமும் சமூகமும் ஆரோக்கியமாக இருக்கும்போது, நாடும் ஆரோக்கியமாக இருக்கும் என அவர் கூறினார். .
'யோகா' என்றால் 'இணைத்தல்' என்று பொருள் என குடியரசுத் தலைவர் கூறினார். யோகா பயிற்சி ஒரு நபரின் உடல், மனம் மற்றும் ஆன்மாவை இணைத்து அவரை ஆரோக்கியமாக்குகிறது. யோகா ஒரு நபரை மற்றொரு நபருடனும், ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்துடனும், ஒரு நாட்டை மற்றொரு நாட்டுடனும் இணைக்க முடியும் என்று அவர் கூறினார். .
தடுப்புக் கொள்கை, சிகிச்சையை விட சிறந்தது என்பது பொதுவான நம்பிக்கை என்று குடியரசு தலைவர் கூறினார். யோகா தடுப்புக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. யோகாவை வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றவும், மற்றவர்கள் யோகா பயிற்சி செய்ய ஊக்குவிக்கவும் அவர் அனைவரையும் வலியுறுத்தினார்.
****
(Release ID: 2138491)
AD/PKV /RJ
(Release ID: 2138696)