தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

11-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, தேசிய ஊடக மையத்தில் யோகா அமர்வு

Posted On: 21 JUN 2025 11:47AM by PIB Chennai

11-வது சர்வதேச யோகா தினம் 2025 ஐக் குறிக்கும் வகையில், இன்று புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் யோகா அமர்வு நடைபெற்றது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு  சஞ்சய் ஜாஜு, கூடுதல் செயலாளர் திரு  பிரபாத், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தலைமை இயக்குநர்  திரு திரேந்திர ஓஜா மற்றும் இணைச் செயலாளர் திரு செந்தில் ராஜன் ஆகியோர்  மூத்த அதிகாரிகள்,  மற்றும் ஊழியர்களுடன் இந்த அமர்வில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பேசிய திரு சஞ்சய் ஜாஜு, “யோகா மிகவும் ஆன்மீக அனுபவத்தைத் தருகிறது. நான் அதை தினமும் பயிற்சி செய்கிறேன். யோகா நம் உடலை நம் ஆன்மாவுடன் இணைக்கிறது.. அது நம்மை உடல் ரீதியாக ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், நம் எண்ணங்களைத் தூய்மையாகவும், செயல்களை எளிமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. நமது சிந்தனையை வழிநடத்துவதிலும், உள் தெளிவைப் பேணுவதிலும் யோகா குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது” என்று கூறினார்.

பயிற்சி பெற்ற யோகா பயிற்றுனர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில், பணியிடத்தில் நல்வாழ்வு மற்றும் நினைவாற்றலை ஊக்குவிக்கும் பல்வேறு ஆசனங்கள், சுவாச நுட்பங்கள் (பிராணாயாமம்) மற்றும் தியானப் பயிற்சிகள் பற்றிய செயல் விளக்கங்கள் இடம்பெற்றன.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்முயற்சியைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினம், 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. யோகா மற்றும் முழுமையான ஆரோக்கியத்தின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் இப்போது உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

****

(Release ID: 2138256)

AD/PKV/RJ


(Release ID: 2138341)