பிரதமர் அலுவலகம்
ஜி7 உச்சிமாநாட்டின் போது, இந்தியா - இத்தாலி பிரதமர்கள் சந்திப்பு
Posted On:
18 JUN 2025 2:59PM by PIB Chennai
கனடாவின் கனனாஸ்கிஸில் நேற்று நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் மேதகு திருமதி ஜியோர்ஜியா மெலோனியை சந்தித்துப் பேசினார். இந்தியா – இத்தாலி இடையேயான நட்புறவு தொடர்ந்து வலுவடையும் என்றும், இது இருநாட்டு மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் திரு மோடி தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், இத்தாலி பிரதமர் வெளியிட்டுள்ள பதிவிற்கு, பதிலளித்துள்ள திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:
"பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ள கருத்துக்கள் ஏற்புடையதாக உள்ளதென்றும் இத்தாலியுடனான நட்புறவு வலுவடைந்து வருவது இருநாட்டு மக்களுக்கும் பெரிதும் பயனளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்”!
***
(Release ID: 2137199)
VJ/SV/KPG/KR
(Release ID: 2137367)
Read this release in:
Gujarati
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam