உள்துறை அமைச்சகம்
புதுதில்லியில் நடைபெற்ற நிவாரண ஆணையர்கள், மாநில பேரிடர் மீட்புப் படைகளின் ஆண்டு மாநாடு நிறைவடைந்தது
Posted On:
17 JUN 2025 5:28PM by PIB Chennai
புதுதில்லியில் உள்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிவாரண ஆணையர்கள், மாநில பேரிடர் மீட்புப் படையின் இரண்டு நாள் ஆண்டு மாநாடு இன்று நிறைவடைந்தது. பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய டாக்டர் பி.கே. மிஸ்ரா, இந்த ஆண்டு மாநாடு பேரிடர் மேலாண்மைக்கான நமது கூட்டு அணுகுமுறையைப் பிரதிபலிக்கவும், மறுபரிசீலனை செய்யவும், வலுப்படுத்தவும் ஒரு பகிரப்பட்ட வாய்ப்பு என்று கூறினார். பேரிடர்களின் தன்மை மாறி வருவது குறித்து குறிப்பிட்ட அவர், இந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதாவது ஆபத்துகள் ஒன்றோடொன்று தொடர்புள்ளவையாக உள்ளன என்றும், அதனால் அபாயங்கள் நாம் எதிர்பார்ப்பதை விட விரைவாக உருவாகின்றன என்றும் கூறினார்.
பேரிடர் நிகழ்வுகள் குறித்த அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ள தயார்நிலை மற்றும் விழிப்புணர்வு மிக முக்கியமானது என்று அவர் தெரிவித்தார். ஆபத்து மற்றும் பாதிப்பு சூழல் மாறி வருவதால், மாநிலங்கள் தங்களது தயார்நிலையை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2136969
***
IR/AG/DL
(Release ID: 2136997)