குடியரசுத் தலைவர் செயலகம்
ஈத்-உஸ்-சுஹா பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து
Posted On:
06 JUN 2025 6:19PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஈத்-உஸ்-சுஹா பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “ஈத்-உஸ்-சுஹா பண்டிகையை முன்னிட்டு, வெளிநாடுகளில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும், இந்தியர்களுக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்தப் பண்டிகை தியாகம், நம்பிக்கை மற்றும் மனிதாபிமான விழுமியங்களின் சின்னமாக கருதப்படுகிறது. இது சமூகத்தில் ஒற்றுமை, அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியைப் மக்களிடையே பரப்புகிறது.
நமது வாழ்வில் தன்னலமற்ற மனப்பான்மை, அர்ப்பணிப்பு ஆகிய மாண்புகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் சிறந்த சமூகத்தை உருவாக்க நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
---
(Release ID: 2134618)
AD/TS/VS/AG/DL
(Release ID: 2134656)