பிரதமர் அலுவலகம்
மத்தியப் பிரதேசத்தின் ஜபுவாவில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 JUN 2025 4:55PM by PIB Chennai
மத்தியப்பிரதேசத்தின் ஜபுவாவில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் திரு மோடி வாழ்த்து தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2,00,000 ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது: “மத்தியப் பிரதேசத்தின் ஜபுவாவில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2,00,000 ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.
----
(Release ID: 2133819)
AD/SM/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2133846)
வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க:
Punjabi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam