குடியரசுத் தலைவர் செயலகம்
இலக்கியம் எவ்வளவு மாறிவிட்டது? என்ற இரண்டு நாள் இலக்கிய மாநாட்டை இந்திய குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்
Posted On:
29 MAY 2025 7:35PM by PIB Chennai
இந்திய குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (மே 29, 2025) குடியரசுத்தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் இலக்கியம் எவ்வளவு மாறிவிட்டது? என்ற இரண்டு நாள் இலக்கிய மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய குடியரசுத்தலைவர், தனது மாணவப் பருவத்திலிருந்தே, இலக்கியம் மற்றும் இலக்கியவாதிகள் மீது தாம் மரியாதை மற்றும் நன்றியுணர்வு கொண்டிருப்பதாகக் கூறினார். காலப்போக்கில், இலக்கியத்திற்கான இந்த சிறப்பு மரியாதை உணர்வு இன்னும் ஆழமாகிவிட்டது, என்றார். பல இலக்கியவாதிகள் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வர வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. இந்த மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக கலாச்சார அமைச்சகம் மற்றும் சாகித்ய அகாடமியை அவர் பாராட்டினார்.
நமது நாடு ஏராளமான மொழிகளையும், எல்லையற்ற பன்முகத்தன்மை கொண்ட இலக்கிய மரபுகளையும் கொண்டுள்ளது என்று குடியரசுத்தலைவர் கூறினார். ஆனால் இந்த பன்முகத்தன்மையில், இந்தியத்தன்மையின் அதிர்வு உணரப்படுகிறது. இந்த இந்தியத்தன்மை உணர்வு நமது நாட்டின் கூட்டு ஆழ் மனதில் வேரூன்றியுள்ளது. மாறிவரும் சூழல்களுக்கு மத்தியில் நீடித்த மனித விழுமியங்களை நிறுவுவதே காலத்தால் அழியாத இலக்கியத்தின் அடையாளம் என்று குடியரசுத்தலைவர் கூறினார்.
சமூகமும் சமூக நிறுவனங்களும் மாறிவிட்டதால், சவால்களும் முன்னுரிமைகளும் மாறிவிட்டன, இலக்கியத்திலும் மாற்றங்கள் காணப்படுகின்றன. ஆனால் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் இலக்கியத்தில் பொருத்தமான ஒன்று உள்ளது. பாசம் மற்றும் இரக்கத்தின் இலக்கிய சூழல்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன, ஆனால் அவற்றின் உணர்ச்சி சார்ந்த பின்னணி மாறாது. இலக்கியத்திலிருந்து உத்வேகம் பெற்று, மனித கனவுகள் அவற்றை நனவாக்குகின்றன, என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132474
***
AD/RB/DL
(Release ID: 2132547)