புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் டையூ ஒரு தேசிய உதாரணமாகும்: மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி

Posted On: 29 MAY 2025 4:05PM by PIB Chennai

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதில் டையூ ஒரு தேசிய அளவிலான உதாரணமாகத் திகழ்கிறது என்று மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி கூறினார். சூரிய சக்தி பயன்பாட்டில் அதன் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும், பிரதமரின் சூரிய மேற்கூரை மின் உற்பத்தி திட்டத்தின் செயல்பாட்டை மதிப்பிடவும் மத்திய அமைச்சர் திரு ஜோஷி இன்று டையூ சென்றார். அப்போது பேசிய அவர், டையூவில் பகல்நேர மின்சார தேவை முழுவதும் சூரிய சக்தி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது என்றும் சூரிய சக்தி மூலம் அதன் முழு மின் தேவையையும் பூர்த்தி செய்யும் நாட்டின் முதல் மாவட்டமாக டையூ திகழ்வதாகவும் அமைச்சர் பாராட்டினார்.

சூரிய மின்சக்தி உற்பத்தியின் நிலை, அதன் தற்போதைய விநியோக கட்டமைப்பு மற்றும் எதிர்கால விரிவாக்க வாய்ப்புகள் குறித்து மறுஆய்வு செய்வதற்காக யூனியன் பிரதேச நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளுடன் டையூவில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திற்கு அமைச்சர் தலைமை தாங்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2132335

***

AD/TS/IR/AG/DL


(Release ID: 2132452)