ஆயுஷ்
azadi ka amrit mahotsav

78-வது உலக சுகாதார மாநாட்டில், உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ உத்திக்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் வலுப்படுத்தியுள்ளது

Posted On: 27 MAY 2025 3:39PM by PIB Chennai

ஆரோக்கியத்திற்கான ஒரு உலகம் என்ற கருப்பொருளின் கீழ் ஜெனீவாவில் நடைபெற்ற 78-வது உலக சுகாதார மாநாட்டில், சுகாதாரப் பராமரிப்புக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாக பாரம்பரிய மருத்துவ அமைப்புகளை வலுப்படுத்துவதற்கான தனது வலுவான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் சார்பில் பங்கேற்று பேசிய ஜெனீவாவில் உள்ள ஐநா சபையின் நிரந்தர பிரதிநிதி திரு அரிந்தம் பாக்சி, உலக சுகாதார அமைப்பு, புதிய உலகளாவிய பாரம்பரிய மருத்துவ உத்தி 2025–2034-ஐ ஏற்றுக்கொண்டதை வரவேற்றார். மேலும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய நடைமுறைகளை தேசிய மற்றும் உலகளாவிய சுகாதார கட்டமைப்புகளில் இணைப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளை எடுத்துரைத்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை கொண்ட  தலைமையின் கீழ், ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா போன்ற அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பாரம்பரிய முறைகளுடன் நவீன மருத்துவத்தை ஒருங்கிணைக்கும் இந்தியாவின் அணுகுமுறை உலக நாடுகளுக்கு நடைமுறை மாதிரியாக இருக்கும் என்று கூறினார்.

உலகளாவிய பாரம்பரிய  மருத்துவ சூழல் அமைப்பிற்கு இந்தியாவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பானது குஜராத்தின் ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பு உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தை நிறுவுவதில் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2131618  

-----

AD/TS/IR/KPG/RJ/DL


(Release ID: 2131709)