பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 18 MAY 2025 9:27PM by PIB Chennai

மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய திரு மோடி பிரார்த்தித்தார்.

உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 மும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

"மகாராஷ்டிராவின் சோலாப்பூர் தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதால் மனம் வருந்தினேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்".

***

(Release ID: 2129516)

TS/SMB/AG/KR


(Release ID: 2129587)