பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்புத் துறைச் செயலாளர் கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் ஆய்வு மேற்கொண்டார்

Posted On: 18 MAY 2025 2:20PM by PIB Chennai

பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், மே 16 முதல் 17 வரை இரண்டு நாள் பயணமாக விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்குச் சென்றார்.

இந்தப் பயணத்தின் போது, ​​பாதுகாப்புச் செயலாளர் கிழக்கு கடற்படை கட்டளையின் தலைமைத் தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெண்டார்கருடன் கலந்துரையாடினார்.

கட்டளை தலைமையகத்தின் செயல்பாட்டுத் திறன்கள் மற்றும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புத் துறைச் செயலாளருக்கு விளக்கப்பட்டது. கடற்படை செயல்பாட்டு திறன்களை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த விரிவான விளக்கமும் அவருக்கு அளிக்கப்பட்டது.

****

(Release ID: 2129461)

TS/PLM/SG

 

 


(Release ID: 2129494)
Read this release in: English , Hindi