பிரதமர் அலுவலகம்
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையை அறிவித்தார்
Posted On:
12 MAY 2025 5:46PM by PIB Chennai
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் திரு. மோடி வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-ம் கருணைத் தொகையை அறிவித்தார்.
பிரதமர் அலுவலகம் X வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு;
“சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த வருத்தம். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.
இறந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi”
***
SM/DL
(Release ID: 2128250)
Visitor Counter : 2
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam