சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜே.பி நட்டா தலைமையில் அவசர சுகாதார அமைப்புகள் தயார்நிலை குறித்த உயர் மட்ட குழுக் கூட்டம்

Posted On: 09 MAY 2025 5:18PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் திரு ஜே.பி நட்டா, சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் அவசர சுகாதார அமைப்புகளின் தயார்நிலையை மறுஆய்வு செய்யும் உயர் மட்டக் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

அவசரகால நிகழ்வுகளைக் கையாள்வதற்கான மருத்துவத் தயார்நிலையின் தற்போதைய நிலை குறித்த விவரங்கள் அவரிடம் அளிக்கப்பட்டன. ஆம்புலன்ஸ்களை தயார்நிலையில் வைத்திருப்பது, மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், இரத்த சேகரிப்புகள் மற்றும் நுகர்பொருட்கள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்தல்; சிகிச்சைக்கான படுக்கைகள், அவசர சிகிச்சைப் பிரிவின் அடிப்படையில் மருத்துவமனையின் தயார்நிலை, நடமாடும் மருத்துவ யூனிட்டுகள் மொபைல் மூலம் அளிக்கப்படும் மேம்பட்ட சிகிச்சைப் பிரிவுகள் போன்றவற்றைப் பயன்படுத்துதல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சரிடம் விளக்கப்பட்டது.

அத்தியாவசிய மருந்துகள், போதுமான இரத்த விநியோகம், ஆக்ஸிஜன், அவசர சிகிச்சைப் பெட்டிகள் போன்றவற்றை உறுதி செய்ய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புது தில்லி எய்ம்ஸ் மற்றும் பிற மத்திய அரசு மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தயார் நிலையில் வைக்க தேவையான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அவசரகால மீட்புப் பணி தொடர்பான அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம், ஆயுதப்படைகள், மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் போன்ற மண்டல அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக, எய்ம்ஸ், பிஜ்மர், ஜிப்மர் மற்றும் பிற முன்னணி மருத்துவமனைகளில் பேரிடர் தயார் நிலைக்கான நாடு தழுவிய மாதிரி பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அவசரகால சுகாதாரப் பராமரிப்பில் திறன் மேம்பாட்டிற்காக, கூடுதல் பயிற்சிகள் இந்திய செஞ்சிலுவைச் சங்கம், தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனம் ஆகியவற்றின் ஆதரவுடன் வழங்கப்படுகின்றன. பயனுள்ள மீட்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய, மத்திய மற்றும் மாநிலங்களுடன் தொடர்புடைய பங்குதாரர்களின் தடையற்ற ஒருங்கிணைப்புக்காக, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு மருத்துவமனைகள் சுகாதார நிறுவனங்களுடனான தொடர் கூட்டங்கள் குறித்து மத்திய சுகாதாரச் செயலாளர் விளக்கமளித்தார்.

அனைத்து மருத்துவ அவசரகால மீட்பு சுகாதார அமைப்புகளும் அனைத்து நேரங்களிலும் போதுமான அளவு செயல்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய சுகாதார அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தேவைப்பட்டால், மாவட்ட அளவில், குறிப்பாக எல்லை மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்ட தரைமட்ட இணைப்புகள் திறம்பட கிடைப்பதை உறுதி செய்யவும் அவர் உத்தரவிட்டார். மேலும், அமைச்சகத்தில் 24X7 கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு தற்போதைய நிலமையை கண்காணித்து மாநிலங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டார்.

*****

(Release ID: 2127935)

TS/GK/SG/KR/DL


(Release ID: 2127955)