எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு மாநிலங்களுடன் மண்டல மின்துறை மாநாடு

இடுகை இடப்பட்ட நாள்: 26 APR 2025 4:14PM by PIB Chennai

மின்சாரத் துறையின் மண்டல மாநாடு ஏப்ரல் 26 அன்று கேங்டாக்கில் சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங் மற்றும்  மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் முன்னிலையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதிகள், மத்திய எரிசக்தித் துறை செயலாளர், எரிசக்தி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

 மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் தமது உரையில், வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கிய பயணத்தில் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு, எதிர்காலத்திற்கு தயாராக, நவீன மற்றும் நிதி ரீதியாக சாத்தியமான எரிசக்தித் துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

வடகிழக்கு மாநிலங்களின் மின்சாரத் துறை தொடர்பான குறிப்பிட்ட சவால்கள் மற்றும் தீர்வுகளை அடையாளம் காண இந்த மண்டல மாநாடு உதவும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

தற்போதைய மின் தேவைகளை பூர்த்தி செய்வதில் 0.1% என்ற சிறிய இடைவெளி இருந்தபோதிலும், எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முயற்சிகள் தொடர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். 2014 முதல், மின் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது, மேலும் அனல், நீர், அணு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி முறைகள் மேம்படுத்தப்பட வேண்டும். நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைய சுற்றுச்சூழல் கவலைகளை நிவர்த்தி செய்வது மற்றும் புதைபடிவம் அல்லாத சக்தியை நோக்கி நகர்வது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124537

****

PKV/SG

 


(வெளியீட்டு அடையாள எண்: 2124562) வருகையாளர் எண்ணிக்கை : 40
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Nepali , हिन्दी , Assamese , Punjabi