உள்துறை அமைச்சகம்
மத்தியப்பிரதேச மாநிலம் நீமுச்சில் நடைபெற்ற மத்திய ரிசர்வ் காவல் படை தின அணிவகுப்பில் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரை
Posted On:
17 APR 2025 3:41PM by PIB Chennai
மத்தியப்பிரதேச மாநிலம் நீமுச்சில் நடைபெற்ற மத்திய ரிசர்வ் காவல் படை தின அணிவகுப்பில் உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், மத்திய ரிசர்வ் காவல் படையின் தலைமை இயக்குனர் உட்பட பலர் பங்கேற்றனர்.
உள்நாட்டுப் பாதுகாப்பில் 2,264 மத்திய ரிசர்வ காவல் படை வீரர்களின் உயிர்த் தியாகத்தை நினைவு கூர்ந்த அமைச்சர், நாடு என்றென்றும் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் என்று கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் அனைத்துத் துறைகளிலும் இந்தியா முன்னணி நாடாக உருவெடுக்கும் என்று நம்பிக்கையை அமைச்சர் தெரிவித்தார். பாதுகாப்புப் பணியின் போது உயிர்த்தியாகம் செய்த மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களின் தியாகம் அவர்களது துணிச்சலை வெளிப்படுத்துவதாக உள்ளதென்று அவர் மேலும் கூறினார். அவர்களது தியாகம் சுதந்திர இந்தியாவின் நூற்றாண்டில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று திரு அமித் ஷா கூறினார். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பராமரிக்க சிஆர்பிஎஃப் வீரர்கள் எப்போதும் உயர்ந்த தியாகத்தை செய்துள்ளனர் என்று அவர் கூறினார்.
2019-ஆம் ஆண்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அனைத்து பாதுகாப்புப் படைகளுக்கும் வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டதாகவும் திரு அமித் ஷா கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், அனைத்து மத்திய ஆயுத காவல் படையினரின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் விமான கூரியர் சேவை வழங்கப்பட்டதையும், சம்பளம், படிகள் உயர்த்தப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். 42 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய ஆயுதப்படை வீரர்களுக்கு ஆயுஷ்மான் மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவற்றின் கீழ் ஆயிரக்கணக்கான மருத்துவமனைகளில் வீரர்களின் குடும்பத்தினர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது ஆயுதப் படைகளில் பெண்களும் பணியமர்த்தப்பட:டு வருவதாகவம் அவர்களுக்காக 124 படைமுகாம்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 109 கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவை தவிர உள்துறை அமைச்சகம் மேலும் 450 படைமுகாம்கள் கட்ட முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2122404
***
TS/SV/KPG/KR
(Release ID: 2122430)