கலாசாரத்துறை அமைச்சகம்
இந்திரா காந்தி தேசியக் கலை மையத்தில் கலாச்சாரம் குறித்த பிரதமரின் உரைகளின் தொகுப்பு – "கலாச்சாரத்தின் ஐந்தாவது அத்தியாயம்" 2025 ஏப்ரல் 18 அன்று வெளியிடப்படுகிறது
Posted On:
16 APR 2025 5:01PM by PIB Chennai
கலாச்சாரம் குறித்த பிரதமர் திரு. நரேந்திர மோடியின் சிந்தனைகள் மற்றும் உரைகளின் தொகுப்பு "கலாச்சாரத்தின் ஐந்தாவது அத்தியாயம்" என்ற தலைப்பில் தற்போது புத்தக வடிவில் வாசகர்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இதற்கான முறையான புத்தக வெளியீட்டு விழா 2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணிக்கு புதுதில்லி ஜன்பத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் சம்வெட் அரங்கத்தில் நடைபெறும்.
இந்த புத்தகத்தை ஜுனா அகாராவின் தலைவர் ஆச்சார்யா மகாமண்டலேஷ்வர் பூஜ்ய சுவாமி அவ்தேஷானந்த் கிரி மகாராஜ் முறைப்படி வெளியிடுவார். இந்த நிகழ்ச்சிக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் தலைமை தாங்குவார். இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் தலைவர் திரு. ராம் பகதூர் ராய் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்.
இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், ஆன்மீக மதிப்புகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆற்றிய உரைகளின் தொகுப்பே "கலாச்சாரத்தின் ஐந்தாவது அத்தியாயம்" ஆகும். இந்தப் புத்தகத்தின் முன்னுரையை ஸ்ரீ ராம் பகதூர் ராய் எழுதியுள்ளார். மேலும் டாக்டர் பிரபாத் ஓஜா தொகுத்துள்ளார். இந்த புத்தகத்தை பிரபாத் பிரகாஷன் வெளியிட்டுள்ளார்.
***
(Release ID: 2122127)
TS/IR/RR/KR
(Release ID: 2122160)