பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு. நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகியோர் குருத்வாரா ரகாப் கஞ்ச் சாஹிபுக்கு வருகை புரிந்தனர்

प्रविष्टि तिथि: 17 MAR 2025 10:26PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடியும், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனும் புதுதில்லியில் உள்ள குருத்வாரா ரகாப் கஞ்ச் சாஹிப்பிற்கு வருகை புரிந்தனர். இந்தப் பயணம் குறித்து சில அம்சங்களைப் பகிர்ந்து கொண்ட திரு மோடி, சேவை மற்றும் மனிதநேயத்தில் சீக்கிய சமூகத்தினரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகம் முழுவதும் உண்மையிலேயே போற்றத்தக்கது என்று கூறினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனும் நானும் ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க குருத்வாரா ரகாப் கஞ்ச் சாஹிப்பிற்கு சென்றோம். சேவை மற்றும் மனிதநேயத்திற்கான சீக்கிய சமூகத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகம் முழுவதும் உண்மையிலேயே போற்றத்தக்கது@chrisluxonmp".

"குருத்வாரா ரகாப் கஞ்ச் சாஹிப்பிலிருந்து மேலும் சில காட்சிகள் @chrisluxonmp".

***

(Release ID: 2112060)
TS/IR/RR/KR

 


(रिलीज़ आईडी: 2112111) आगंतुक पटल : 34
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam