தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிசம்பர் மாதத்தில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி நிறுவனத்தின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 17.01 லட்சம் புதிய தொழிலாளர்கள் சேர்ந்துள்ளனர்

Posted On: 21 FEB 2025 4:12PM by PIB Chennai

2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட ஊதியத் தரவு  குறித்த பட்டியலின் படி, 17.01 லட்சம் புதிய சந்தாதாரர்கள் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தில் சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் கீழ், டிசம்பர் மாதத்தில் 20,360 புதிய நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 8.22 லட்சம் ஊழியர்கள், அதாவது மொத்த பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களில் சுமார் 48.35% பேர் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2105266

***

TS/SV/RJ/KR/DL


(Release ID: 2105399) Visitor Counter : 8