உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

5 மாநிலங்களுக்கு ரூ.1554.99 கோடி கூடுதல் மத்திய நிதியுதவி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 19 FEB 2025 10:52AM by PIB Chennai

2024 ஆம் ஆண்டு மழை வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட  5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் உதவி நிதியின் கீழ்(NDRF) ரூ.1554.99 கோடி கூடுதல் மத்திய நிதியுதவி வழங்க மத்திய  உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர்  திரு அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.  தேசிய பேரிடர்களை எதிர்கொண்ட ஐந்து மாநில மக்களுக்கு உதவும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் உறுதிப்பாட்டை  இது எடுத்துக் காட்டுகிறது. 

இந்த நிதியுதவியில் ஆந்திரப்பிரதேசம் ரூ.608.08 கோடியும், நாகாலாந்து ரூ.170.99 கோடியும், ஒடிசா ரூ.255.24 கோடியும், தெலங்கானா ரூ.231.75 கோடியும், திரிபுரா ரூ.288.93 கோடியும் பெறும். 

2024-25 நிதியாண்டில் 27 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் உதவி நிதிக்கு மத்திய அரசு ரூ.18,322.80 கோடி விடுவித்துள்ளது.    18 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து(NDRF) ரூ.4808.30 கோடியும், 14 மாநிலங்களுக்கு  மாநில பேரிடர் தணிவிப்பு நிதியிலிருந்து(SDMF) ரூ.2208.55 கோடியும், 8 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் தணிவிப்பு நிதியிலிருந்து (NDMF) ரூ.719.72 கோடியும் மத்திய அரசால் விடுவிக்கப்பட்டது.

***

TS/SMB/KV/KR

 


(Release ID: 2104621) Visitor Counter : 56