பிரதமர் அலுவலகம்
நீங்கள் சரியாக சாப்பிட்டால், உங்களால் தேர்வுகளை சிறப்பாக எழுத முடியும்!: பிரதமர்
Posted On:
13 FEB 2025 7:27PM by PIB Chennai
சரியான உணவை உட்கொள்வதும், நன்றாகத் தூங்குவதும் தேர்வுகளை சிறப்பாக எழுத உதவும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவுறுத்தி இருக்கிறார். தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நான்காவது அத்தியாயத்தை நாளை காணுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவிற்கு பதிலளித்து திரு மோடி கூறியதாவது:
"நீங்கள் சரியாக சாப்பிட்டால், உங்களால் தேர்வுகளை சிறப்பாக எழுத முடியும்! தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நான்காவது அத்தியாயம், தேர்வுக்குத் தயாராவதற்கு முன்னதாக நன்றாக சாப்பிடுவது மற்றும் தூங்குவது பற்றியதாக இருக்கும். ஷோனாலி சபர்வால், ருஜுதா திவேகர் மற்றும் ரேவந்த் ஹிமத்சிங்கா ஆகியோர் இது பற்றி நாளை, பிப்ரவரி 14 அன்று தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதைக் கேளுங்கள். #PPC2025 #ExamWarriors
@foodpharmer2"
***
RB/DL
(Release ID: 2102961)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam