உள்துறை அமைச்சகம்
குஜராத் மாநிலம் மெஹ்சானாவில் உள்ள கன்பத் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்
Posted On:
16 JAN 2025 8:49PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத்தின் மெஹ்சானாவில் உள்ள கன்பத் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் புரவலர் தலைவர் திரு கணபத் படேல் மற்றும் குஜராத் மாநிலத்தின் உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் திரு ருஷிகேஷ் படேல் மற்றும் இதர பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இன்று 4,175 மாணவர்கள் பட்டம் பெறுகிறார்கள் என்று குறிப்பிட்டார். புதிய விஷயங்களைக் கற்று புதிய உச்சங்களை அடையும் போக்குதான் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடிப்படை என்று அவர் வலியுறுத்தினார். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் போது, பிரதமர் திரு நரேந்திர மோடி, சுதந்திரத்திற்கான போராட்டங்கள் மற்றும் சுதந்திரம் அடைந்ததில் இருந்து, இதுவரை செய்த சாதனைகள் குறித்து தேசத்தின் இளைஞர்களுக்கு நினைவுபடுத்தினார் என்று திரு அமித் ஷா கூறினார். நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா அனைத்துத் துறைகளிலும் முதலிடத்தில் இருக்கும் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் உலக அளவில் உற்பத்தியின் மையமாக இந்தியா மாறியுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். இன்று, ஒவ்வொரு உலக நிறுவனமும் இந்தியாவில் தங்கள் ஆலைகளை அமைக்க ஆர்வமாக உள்ளன. திறன் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற முயற்சிகள் இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை திரு அமித் ஷா பட்டியலிட்டார். இந்தக் காலகட்டத்தில், எட்டு ஐ.ஐ.எம்கள், ஏழு ஐ.ஐ.டிகள், இரண்டு ஐ.ஐ.எஸ்.இ.ஆர்கள், ஒரு என்.ஐ.டி, 16 ஐ.ஐ.ஐ.டிகள், ஆறு புதிய மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் 54 தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன, இது மில்லியன் கணக்கான இளைஞர்களுக்கு உயர் கல்விக்கான ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கியது.
நோட்டு புத்தகங்களை மாற்றிக் கொள்வதற்கு பதிலாக யோசனைகளை பரிமாறிக்கொள்ள இளைஞர்களை அமைச்சர் ஊக்குவித்தார். மதிப்பெண்கள் சார்ந்த மனப்பான்மைக்கு பதிலாக அறிவு சார்ந்த மனநிலையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2093593
**************
TS/BR/KV
(Release ID: 2093673)