பிரதமர் அலுவலகம்
திரு சசிகாந்த் ரூயா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
26 NOV 2024 9:17AM by PIB Chennai
தொழில்துறை உலகின் மாபெரும் மனிதரான திரு சசிகாந்த் ரூயா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வளர்ச்சிக்கும் உயர்ந்த அளவுகோல்களை அமைத்ததற்காக திரு மோடி அவரைப் பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"திரு சசிகாந்த் ருயா அவர்கள் தொழில்துறை உலகில் ஒரு மகத்தான மனிதர். அவரது தொலைநோக்கு தலைமையும் மேன்மைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் இந்தியாவின் வணிக வரைபடத்தை மாற்றியமைத்தது. புதுமை மற்றும் வளர்ச்சிக்கான உயர்ந்த அளவுகோல்களையும் அவர் நிர்ணயித்தார். அவர் எப்போதும் யோசனைகள் நிறைந்தவராக இருந்தார், நம் நாட்டை எவ்வாறு சிறந்ததாக மாற்ற முடியும் என்பது பற்றி எப்போதும் விவாதித்தார்.
சசி அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி."
****
AD/SMB/KV/DL
(Release ID: 2077584)
Visitor Counter : 35
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam