பிரதமர் அலுவலகம்
மகாத்மா காந்திக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 NOV 2024 9:57PM by PIB Chennai
கயானாவின் ஜார்ஜ்டவுனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புரோமினேட் கார்டனில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். மனிதகுலத்திற்கு தொடர்ந்து வழிகாட்டும் அமைதி மற்றும் அகிம்சை ஆகிய மகாத்மா காந்தியின் மாண்புகளை அவர் நினைவு கூர்ந்தார். 1969-ஆம் ஆண்டில் காந்திஜியின் 100வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த சிலை நிறுவப்பட்டது.
அருகில் அமைந்துள்ள ஆரிய சமாஜ் நினைவிடத்திற்கும் பிரதமர் மலர் அஞ்சலி செலுத்தினார். கயானாவில் ஆரிய சமாஜ் இயக்கத்தின் 100 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் இந்த நினைவுச்சின்னம் கடந்த 2011- ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
TS/BR/KR
***
(வெளியீட்டு அடையாள எண்: 2075821)
வருகையாளர் எண்ணிக்கை : 71
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam