பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹரியானா மாநிலம் கைதாலில் சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல்

Posted On: 12 OCT 2024 1:48PM by PIB Chennai

 

ஹரியானா மாநிலம் கைதாலில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"ஹரியானாவின் கைதாலில் நடந்த சாலை விபத்து வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வலியை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம் சம்பவ இடத்தில் அனைத்து உதவிப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது."

*****

 

PLM/ KV

 

 

 



(Release ID: 2064370) Visitor Counter : 23