பிரதமர் அலுவலகம்
லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த நாளையொட்டி பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
Posted On:
11 OCT 2024 8:50AM by PIB Chennai
லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் அவர் செய்த பங்களிப்புகளைப் பாராட்டிய திரு மோடி, திரு ஜே.பி.நாராயணின் ஆளுமையும் கொள்கைகளும் ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக இருக்கும் என்றார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த நாளையொட்டி அவருக்கு எனது மரியாதை நிறைந்த அஞ்சலி. நாட்டிலும் சமூகத்திலும் ஆக்கபூர்வமான மாற்றத்திற்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது ஆளுமையும் கொள்கைகளும் ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகம் அளிக்கும்."
***
SMB/DL
(Release ID: 2064101)
Read this release in:
Odia
,
Telugu
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam