அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav g20-india-2023

சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.சி.பி.ஆர் சி.எஸ்.ஐ.ஆரின் 83 ஆண்டு அறிவியல் சிறப்பை நினைவுகூருகிறது

Posted On: 01 OCT 2024 11:52AM by PIB Chennai

சி.எஸ்..ஆர்-தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (சி.எஸ்..ஆர்-என்..எஸ்.சி.பி.ஆர்) அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்..ஆர்) 83 வது நிறுவன தினத்தை புதுதில்லி, பூசாவில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் கொண்டாடியது.

சி.எஸ்..ஆர்-என்..எஸ்.சி.பி.ஆர் இயக்குநர் பேராசிரியர் ரஞ்சனா அகர்வால் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. "சி.எஸ்..ஆர் ஆய்வகங்கள், அறிவியல் - தொழில்நுட்பத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் (என்..எஸ்.சி.பி.ஆர்), அறிவியலுக்கும் சமூகத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் எங்கள் கவனம் உள்ளது. நாங்கள் 15 ஆராய்ச்சி இதழ்கள் மற்றும் மூன்று பிரபலமான அறிவியல் பத்திரிகைகளை வெளியிடுகிறோம். மேலும் எங்கள் உள்ளடக்கத்தை அனைத்து இந்திய மொழிகளிலும் அணுகுவதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம். அண்மையில் .நா.சபை அறிவியல் உச்சி மாநாட்டில் பங்கேற்றோம் என்பது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் கூறினார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஹரியானா மத்திய பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் பேராசிரியர் (டாக்டர்) சுஷ்மா யாதவ் பேசுகையில், "சி.எஸ்..ஆர் அறிவியல் மற்றும் தொழில்துறைக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க முயற்சிக்கிறது என்றார்.  வரலாற்று ரீதியாக, இந்தியாவில் அறிவியல் மனப்பான்மை இல்லை என்ற தவறான கருத்து உள்ளது, மேலும் சி.எஸ்..ஆர் இந்த கருத்தை அகற்ற செயல்பட்டு வருகிறது. ஆன்மீக மனப்பான்மையுடன் இணைந்து வாழும் ஒரு விஞ்ஞான பாரம்பரியத்தை ஊக்குவிப்பதன் மூலம், பகுத்தறிவு விசாரணை மற்றும் கலாச்சார விழுமியங்களின் இணக்கமான கலவையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

கல்வி தகவல் தொடர்பு கூட்டமைப்பின் இயக்குனர் பேராசிரியர் ஜகத் பூஷண் நட்டா கூறுகையில், "சி.எஸ்..ஆர் இந்தியாவின் அறிவியல் பாரம்பரியத்தை பாராட்டத்தக்க வகையில் முன்னெடுத்துச் சென்றுள்ளது, இது நமது நாட்டின் பயணத்தில் ஒரு மூலக்கல்லாக செயல்படுவதாக கூறினார். தேசிய சவால்களை எதிர்கொள்வதில் முன்னணியில் இருப்பதன் மூலம், சி.எஸ்..ஆர் தொடர்ந்து சமூகத்திற்கு பெரிய அளவில் பயனளித்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் அறிவியலை அணுகக்கூடியதாக மாற்றுவதே காலத்தின் தேவையாகும். தாக்கத்தை அதிகரிக்க, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் செயல்படக்கூடிய கொள்கைகளாக மாற்றப்பட வேண்டும். சி.எஸ்..ஆர் உயர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு இடையில், ஒருங்கிணைப்பை வெற்றிகரமாக உருவாக்கி, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளில் உலகளாவிய தலைவராக இந்தியாவை நிலைநிறுத்துகிறது.

இந்த நிகழ்ச்சியின் போது, சி.எஸ்..ஆர்-என்..எஸ்.சி.பி.ஆர்-ன் மாதாந்திர வெளியீடான 'அறிவியல் நிருபர்' சிறப்பு வெளியீடும் வெளியிடப்பட்டது. இதழின் தலைப்பு "அறிவியல் நிருபர்: அறிவியல் தொடர்பில் ஆறு தசாப்த பயணம் (1964-2024)". ஓய்வு பெற்றவர்கள், 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஊழியர்கள் மற்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களால் விருதுகள் வழங்கப்பட்டன.

சி.எஸ்..ஆர் அறக்கட்டளை நாள் கொண்டாட்டங்களின் மாலையில் ஒரு சிறப்பான துடிப்பான கலாச்சார நிகழ்ச்சியைக் கொண்டிருந்தது, அதைத் தொடர்ந்து, நிறுவன நாள் போட்டிகளுக்கான பரிசு விநியோகம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சியின் போது, என்..எஸ்.சி.பி.ஆர் ஊழியர்களின் குழந்தைகள், அறிவியல் - தொழில்நுட்பத்துறை மற்றும் நிர்வாக ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் திட்ட ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று, தங்கள் பாடல் மற்றும் நடனத்தை மிகச் சிறப்பாக நிகழ்த்தினர். சி.எஸ்..ஆர்-என்..எஸ்.சி.பி.ஆர் தலைமை விஞ்ஞானியும், என்..எஸ்.சி.பி.ஆர் இன் சி.எஸ்..ஆர் அறக்கட்டளை தின ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான திரு முகேஷ் பந்த் நன்றி தெரிவித்தார். மேலும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அனைத்து குழுக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சி.எஸ்..ஆர்-என்..எஸ்.சி.பி.ஆர் ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினர், ஏசிஎஸ்ஐஆர் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். வெவ்வேறு துணைக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்கள் ஒப்படைக்கப்பட்ட பணிகளை மிகச் சிறப்பாக  ஒருங்கிணைத்தனர்.

***

PKV/AG/KV



(Release ID: 2060651) Visitor Counter : 19