எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பூபதிராஜு சீனிவாச வர்மா , செயல்முறை மற்றும் தயாரிப்பு கண்டுபிடிப்புகள் குறித்த சர்வதேச மாநாடு மற்றும் பசுமை எஃகு உற்பத்தி குறித்த கருத்தரங்கை தொடங்கிவைத்தார்

Posted On: 28 SEP 2024 11:10AM by PIB Chennai

மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் அமைச்சர் திரு பூபதிராஜு சீனிவாச வர்மா "உலோக உற்பத்தியில் செயல்முறை மற்றும் தயாரிப்பு கண்டுபிடிப்புகள்" குறித்த சர்வதேச மாநாடு மற்றும் பசுமை எஃகு உற்பத்தி குறித்த திறந்த கருத்தரங்கு ஆகியவற்றை உள்ளடக்கிய  MMMM 2024 என்ற விரிவான நிகழ்வைத் தொடங்கி வைத்தார்ஹைவ் இந்தியா லிமிடெட், ஐஐஎம் தில்லி , மெட்டாலாஜிக் பிஎம்எஸ் மற்றும் வேர்ல்ட் மெட்டல் ஃபோரம் ஆகியவற்றால் செப்டம்பர் 27 முதல் 29 வரை யஷோபூமியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இணை அமைச்சர், எஃகு துறையில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் செயல்திறனைப் பாராட்டினார். இது முந்தைய சகாப்தங்களில் சில கிலோவாக இருந்த உலகளாவிய எஃகு உற்பத்தியை 2 பில்லியன் டன்களுக்கு நெருக்கமாக உயர்த்தியுள்ளது. உலகளாவிய திறன் 2.5 பில்லியன் டன்களை எட்டியுள்ளது என்று அவர் கூறினார்.

 இந்தியா மற்றும் உலகளாவிய எஃகு தேவை வரும் காலங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் என்று அவர் கூறினார். இந்தியன் ஸ்டீலுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ள. தற்போது 2024 ஆம் நிதியாண்டில் 178 மில்லியன் டன் திறன் மற்றும் 144 மில்லியன் டன் உற்பத்தியுடன் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது என அவர் தெரிவித்தார்.

 எஃகுத் துறை அதன் வாழ்க்கைச் சுழற்சியில் திருப்புமுனை தருணத்தில் உள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், அதன் செயல்முறைகளில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுற்றுச்சூழல் கார்பன் தடங்களைக் குறைக்க உமிழ்வு அளவைக் குறைக்க நீடித்த எஃகு உற்பத்தியைச் சுற்றி எதிர்கால திசை கட்டமைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

2021 நவம்பர் 2 அன்று COP26- ல்  பிரதமர் திரு நரேந்திர மோடி 2030 ஆம் ஆண்டுவாக்கில்  இந்தியா தனது பொருளாதாரத்தின் கார்பன் தீவிரத்தை 45 சதவீதத்திற்கும் அதிகமாக குறைக்கும் என்றும், 2070 –ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய இலக்கை அடையும் என்றும் உறுதியளித்ததை திரு பூபதிராஜு சீனிவாச வர்மா தொழில்துறை பிரதிநிதிகளுக்கு நினைவூட்டினார்

இந்தப் பிரச்சினையின் அவசரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, எஃகுத் துறையில் கார்பன் நீக்கத்தை நோக்கிய பாதையை வரையறுப்பதற்காக எஃகு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட 14 பணிக்குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட "இந்தியாவில் எஃகுத் துறையை பசுமையாக்குதல்செயல் திட்டம்" என்ற தலைப்பிலான அறிக்கையை எஃகு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டதுஎரிசக்தி திறன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன், பொருள் திறன், நிலக்கரி அடிப்படையிலான டிஆர்ஐயிலிருந்து இயற்கை எரிவாயு அடிப்படையிலான டிஆர்ஐக்கு செயல்முறை மாற்றம், கார்பன் பிடிப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு (சிசியூஎஸ்) மற்றும் எஃகில் பயோசார் பயன்பாடு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் குறித்த ஆழமான பரிந்துரைகளை இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2059766.

*****

PKV/ KV

 



(Release ID: 2059809) Visitor Counter : 17