தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
குறுஞ்செய்தி அனுப்புவதற்கான அனுமதிப்பட்டியலில், யூஆர்எல், ஏபிகேஎஸ் அல்லது ஓடிடி இணைப்புகளை ட்ராய் கட்டாயமாக்கியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
26 SEP 2024 1:54PM by PIB Chennai
செய்திகளில் யூஆர்எல்-கள் (சீரான வள இருப்பிடங்கள்) தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) 20 ஆகஸ்ட் 2024 அன்று ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டது, யூஆர்எல்கள், ஏபிகேகள் (Android Package Kit) அல்லது ஓடிடி (ஓவர் தி டாப்) இணைப்புகளைக் கொண்ட எந்தவொரு போக்குவரத்தையும் தடுக்குமாறு அனைத்து அணுகல் வழங்குநர்களுக்கும் அறிவுறுத்தியது. இந்த உத்தரவு 2024 அக்டோபர் 1-ம் தேதிக்குள் செயல்படுத்தப்பட உள்ளது.
யூஆர்எல்-களைக் கொண்ட குறுஞ்செய்தி (SMS) அனுப்புவதில் சீரான ஓட்டத்தை உறுதி செய்ய, பதிவுசெய்யப்பட்ட அனுப்புநர்கள் தங்கள் அனுமதிப் பட்டியலில் உள்ள யூஆர்எல்கள்/ஏபிகேகள்/ஓடிடி இணைப்புகளை அந்தந்த அணுகல் வழங்குநர்களின் போர்ட்டலில் உடனடியாக பதிவேற்றுமாறு டிராய் அறிவுறுத்துகிறது. இதுவரை, 3,000-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அனுப்புநர்கள் 70,000-க்கும் மேற்பட்ட இணைப்புகளை அனுமதிப்பட்டியலிடுவதன் மூலம் இந்தத் தேவைக்கு இணங்கியுள்ளனர். உரிய தேதிக்குள் தங்கள் இணைப்புகளை அனுமதிப்பட்டியலில் சேர்க்கத் தவறிய அனுப்புநர்கள், யுஆர்எல்/எபிகே/ஓடிடி இணைப்புகளைக் கொண்ட எந்த செய்திகளையும் அனுப்ப முடியாது.
வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான தகவல்தொடர்பு முறையை வளர்க்கும் அதே வேளையில், தீங்கிழைக்கும் இணைப்புகளைக் கொண்ட கோரப்படாத செய்திகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க டிராய் இன் இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகளுக்கு இணங்குவதன் மூலம், அணுகல் வழங்குநர்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட அனுப்புநர்கள் இருவரும் மிகவும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான செய்தியிடல் சூழலை உருவாக்க உதவலாம்.
***
MM/KPG/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2059062)
வருகையாளர் எண்ணிக்கை : 114