சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

தூய்மையே சேவை- 2024

Posted On: 13 SEP 2024 2:13PM by PIB Chennai

தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10-வதுஆண்டு நிறைவைக்கொண்டாடும் வகையில், நீதித்துறை தூய்மையே சேவை இயக்கம்- 2024 (SHS 2024) என்ற இயக்கத்தை 2024 செப்டம்பர் 17 முதல் 2024 அக்டோபர் 2 வரை நடத்துகிறது.

இந்தியா முழுவதும் தூய்மை முயற்சிகளில் கூட்டு நடவடிக்கைகளையும் மக்களின் பங்களிப்புகளையும் அதிகரிக்க இது நடத்தப்படுகிறது. இது 'முழு சமூகம்' அணுகுமுறையை வலியுறுத்தும் மூன்று முக்கிய தூண்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக, துறையின் அனைத்து அதிகாரிகள் / ஊழியர்களுக்கும் 2024 செப்டம்பர் 17 அன்று 11:00 மணிக்கு நீதித்துறைச் செயலாளர் தலைமையில் 'தூய்மை உறுதிமொழி' ஏற்று வைக்கப்படும். இந்த இயக்கத்தின் காலத்தில், துறையின் அதிகாரிகள், ஊழியர்கள் ஜெய்சால்மர் ஹவுஸ் வளாகத்தின் கட்டடத்தை தூய்மை செய்வது உள்ளிட்ட பணிகளைச்  செய்வார்கள்.

இந்த இயக்கத்தில் உச்சநீதிமன்றம்,  நாட்டின் இதர நீதிமன்றங்கள் முக்கிய பங்களிப்பை வழங்குமாறு நீதிபதிகளை சட்ட அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2054481

PLM/RS/KR

--------------



(Release ID: 2054540) Visitor Counter : 81