ஆயுஷ்

'சித்தா' மருந்துகளின் கலவை வளரிளம் பெண்களின் ரத்த சோகையைக் குறைக்கிறது: ஆய்வில் தகவல்

Posted On: 10 SEP 2024 1:09PM by PIB Chennai

பொது சுகாதார முன்முயற்சி (பி.எச்.ஐ) ஆராய்ச்சியாளர்களால் புகழ்பெற்ற இந்திய பாரம்பரிய அறிவு இதழில் (ஐ.ஜே.டி.கே) சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், சித்த மருந்துகளின் கலவை வளரிளம் பருவத்து பெண்களிடையே ரத்த சோகையைக் குறைக்கிறது என்று கூறுகிறது. ரத்த சோகையைக் குறைப்பதில் 'சித்தா' மருந்துகளை பிரதானமாக பயன்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் (என்ஐஎஸ்) உட்பட நாட்டின் புகழ்பெற்ற சித்த மருத்துவ நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் குழு, சேவியர் ஆராய்ச்சி அறக்கட்டளை, தமிழ்நாடு, வேலுமயிலு சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, தமிழ்நாடு சித்த மருந்து சிகிச்சையின் கலவையான அன்னபேதி செந்தூரம், பாவனக் கடுக்காய், மாதுளை மணப்பாகு, நெல்லிக்காய் லேகியம் ஆகியவற்றைக் கொண்ட ஏபிஎன்எம்,  ரத்த சோகை உள்ள வளரிளம் பருவத்துப் பெண்களில் ஹீமோகுளோபின் மற்றும் பிசிவி-நிரம்பிய செல் அளவு, எம்சிவி-சராசரி கார்பஸ்குலர் ஹீமோகுளோபின் மற்றும் எம்சிஎச் -மீன் கார்பஸ்குலர் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இந்த ஆய்வில் 2,648 சிறுமிகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர், அவர்களில் 2,300 பேர் 45 நாள் நிலையான திட்டத்தை முடித்தனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு, ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பாளர்களுக்கு குடற்புழு நீக்கம் செய்தனர். பின்னர் அன்னபேதிசெந்தூரம், பாவண கடுக்காய், மாதுளை மணப்பாகு மற்றும் நெல்லிக்காய் லேகியம் (ஏபிஎம்என்) ஆகியவற்றின் 45 நாள் சிகிச்சை கண்காணிப்பில் உள்ள அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் வழங்கப்பட்டது.

ஹீமோகுளோபின் மதிப்பீடு மற்றும் உயிர்வேதியியல் மதிப்பீடுகளுடன், மூச்சுத் திணறல், சோர்வு, தலைச்சுற்றல், தலைவலி, பசியின்மை மற்றும் வெளிர் நிறம் போன்ற மருத்துவ அம்சங்கள் ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்பட்டன. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, ரத்த சோகைக்கான கட்-ஆஃப் புள்ளி 11.9 mg/dl, ஹீமோகுளோபின் அளவு 8.0 mg/dl-க்குக் கீழே கடுமையானதாகவும், 8.0 முதல் 10.9 mg/dl வரை மிதமானதாகவும், 11.0 முதல் 11.9 mg/dl வரை லேசானது என்றும் நிர்ணயிக்கப்பட்டது.

மேலும், ஹீமோகுளோபின், நிரம்பிய செல் அளவு (பி.சி.வி), சராசரி கார்பஸ்குலர் அளவு (எம்.சி.வி), சராசரி கார்பஸ்குலர் ஹீமோகுளோபின் (எம்.சி.எச்), சிவப்பு ரத்த அணுக்கள் (ஆர்.பி.சி), பிளேட்லெட்டுகள், மொத்த வெள்ளை அணுக்கள், நியூட்ரோபில்கள், லிம்போசைட்டுகள் மற்றும் ஈசினோபில்ஸ் ஆகியவற்றிற்கான ஆய்வக ஆய்வு 283 சிறுமிகளின் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டது. சோர்வு, முடி உதிர்தல், தலைவலி, ஆர்வம் இழப்பு மற்றும் சீரற்ற மாதவிடாய் போன்ற ரத்த சோகையின் மருத்துவ அம்சங்களை ஏபிஎம்என் கணிசமாகக் குறைத்ததுடன், ரத்த சோகை உள்ள அனைத்து பெண்களிலும் ஹீமோகுளோபின் மற்றும் பி.சி.வி, எம்.சி.வி மற்றும் எம்.சி.எச் அளவை கணிசமாக மேம்படுத்தியது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

ஆய்வு முடிவுகளின் தாக்கம் மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி பேசிய தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஆர். மீனாகுமாரி, "ஆயுஷ் அமைச்சகத்தின் பொது சுகாதார முயற்சிகளில் சித்த மருத்துவம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. வளரிளம் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, உணவு ஆலோசனை மற்றும் நோய்த்தடுப்பு பராமரிப்பு மற்றும் சித்த மருந்துகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சைகள் ரத்த சோகை நோயாளிகளுக்கு சிகிச்சை பலன்களை அளித்தன. எனவே ரத்த சோகைக்கான சித்த மருந்துகள் பல்வேறு அமைப்புகளில் செலவு குறைந்த மற்றும் அணுகக்கூடிய சிகிச்சையை வழங்குவதன் மூலம் பொது சுகாதாரத்திற்கு பங்களிக்க முடியும் என்று அவர் கூறினார்.

ஆய்வின் இணைப்பு:

https://or.niscpr.res.in/index.php/IJTK/article/view/11826#:~:text=Marked%20reduction%20of%20various%20clinical,and%20mild%20anemic%20girls%2C%20respectively.

***

(Release ID: 2053375)

PKV/KPG/RR



(Release ID: 2053420) Visitor Counter : 29