எஃகுத்துறை அமைச்சகம்

ஆர்.ஐ.என்.எல் நிறுவனத்தின் கர்பம் மாங்கனீசு சுரங்க குத்தகையை நீட்டித்ததற்காக ஆந்திரப் பிரதேச முதல்வருக்கு ஆர்.ஐ.என்.எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் திரு அதுல் பட் நன்றி தெரிவித்தார்

Posted On: 18 AUG 2024 12:44PM by PIB Chennai

ஆர்..என்.எல் நிறுவனத்தின் கர்பம் மாங்கனீசு சுரங்கத்தை குத்தகைக்கு நீட்டித்ததற்காக ஆந்திரப் பிரதேச முதலமைச்சருக்கு ஆர்..என்.எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் திரு அதுல் பட் நன்றி தெரிவித்தார்.

ராஷ்டிரிய இஸ்பத் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் (ஆர்..என்.எல்) தலைவரும் மேலாண் இயக்குநருமான திரு அதுல் பட், கர்பம் மாங்கனீசு சுரங்கத்தை ஆர்..என்.எல் நிறுவனத்திற்கு குத்தகைக்கு நீட்டிப்பதில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு நாரா சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்குத் தலைமைக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினரும், ஆந்திர தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான திரு பல்ல சீனிவாச ராவ் மற்றும் விசாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு எம் ஸ்ரீ பாரத் ஆகியோருக்கு திரு அதுல் பட் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். அவர்களின் ஆதரவு மற்றும் நெருங்கிய ஈடுபாடு ஆர்..என்.எல்-கான வளத்தைப் பாதுகாப்பதில் முக்கிய கருவியாக உள்ளது, மேலும் நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிப்பதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.

கர்பம் மாங்கனீசு சுரங்கத்தின் குத்தகைப் பகுதி 654 ஏக்கர் மற்றும் ஆர்..என்.எல் இன் ஆண்டு நுகர்வு  சுமார் 6000 டன் ஆகும். கூட்டு முயற்சியின் விளைவாக ஏற்பட்ட குத்தகை நீட்டிப்பு, பொருளாதார முன்னேற்றத்தை இயக்குவதில் தொழில்துறைக்கும் அரசிற்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

*****

BR / KV

 

 



(Release ID: 2046411) Visitor Counter : 19