பிரதமர் அலுவலகம்
தாயின் பெயரில் ஒரு மரம் நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடுவதற்கு குடியரசுத் துணைத் தலைவருக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
27 JUL 2024 10:04PM by PIB Chennai
குடியரசுத்துணைத் தலைவர் திரு. ஜகதீப் தன்கர், தனது தாயாரை கௌரவிக்கும் வகையில் மரக்கன்றை நடுவது ஊக்கமளிப்பதாக உள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர், புதுதில்லியில் யமுனை நதிக்கரையில் உள்ள இயற்கைச் சூழல் தளமான ஆசிதாவில் தனது தாயார் திருமதி கேசரி தேவி அவர்களின் நினைவாக மரக்கன்று ஒன்றை நட்டார்.
இது பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"முன்மாதிரி! மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள், தனது தாயாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு மரம் நடுவது அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது."
*****
RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2038065)
வருகையாளர் எண்ணிக்கை : 127
இந்த வெளியீட்டை படிக்க:
Manipuri
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam