வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியக் கைவினைக் கலைஞர்களுக்கு ஆதரவளித்து, குழந்தைகளுக்கு பொம்மைகள் மூலம் படைப்பாற்றலை வளர்க்க வேண்டும்: மத்திய இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா

Posted On: 10 JUL 2024 1:40PM by PIB Chennai

பொம்மைத் தொழிலில் இந்தியக் கைவினைக்கலைஞர்களை ஆதரிக்க வேண்டுமெனவும், பொம்மைகள் மூலம் குழந்தைகளின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என்றும் மத்திய வர்த்தகம், தொழில் துறை இணை அமைச்சர் திரு ஜிதின் பிரசாதா கூறியுள்ளார்.

2024 ஜூலை 8, அன்று புதுதில்லியில் தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, இன்வெஸ்ட் இந்தியா அமைப்பு, இந்திய பொம்மை சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய 'பொம்மை தொழில் தொடர்பான கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர்பொம்மை தயாரிப்பில் இந்தியா சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்றார்.  இந்திய பொம்மை தொழில்துறையை ஊக்குவிக்க வேண்டுமென்று கூறிய அவர், பொம்மைகள் மூலம் குழந்தைகள்  கற்பனைத் திறனையும், படைப்பாற்றலையும் வளர்க்க முடியும் என்று தெரிவித்தார்.

தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் உரையாற்றுகையில், அரசின் முன்முயற்சிகள் காரணமாக, இந்திய பொம்மைத் தொழில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில்  பொம்மை உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள், சில்லறை விற்பனையாளர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

***

(Release ID: 2032062)

SMB/PLM/AG/KR



(Release ID: 2032116) Visitor Counter : 19