சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜூன் ராம் மெக்வால் பொறுப்பேற்றுக்கொண்டார்

Posted On: 11 JUN 2024 4:46PM by PIB Chennai

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜூன் ராம் மெக்வால் இன்று புதுதில்லியில் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே பேசிய அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியால் வழி நடத்தப்படுகின்ற தாம், அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவை செய்ய உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

விரைவில் அமல்படுத்தப்பட இருக்கும் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, முன்னுரிமை பணியாகும் என்று அவர் கூறினார். மேலும் நீதிமன்றங்களில் மக்களுக்கு விரைவான நீதி கிடைக்க வேண்டும் என்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

***

SRI/SMB/RS/DL



(Release ID: 2024404) Visitor Counter : 33