பாதுகாப்பு அமைச்சகம்

மே 9-10 தேதிகளில் நடைபெறும் ஆயுதப்படைகளின் கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கான மாற்றத்திற்கான சிந்தனை 2 -க்கு முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான் தலைமை தாங்குவார்

Posted On: 09 MAY 2024 8:42AM by PIB Chennai

முப்படைகளுக்கிடையேயான கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு உத்வேகம் அளிக்க ராணுவம் விரும்புகிறது.

புதுமையான சீர்திருத்த சிந்தனைகள் மற்றும் முன்முயற்சிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட அனைத்து முப்படைகளின் தலைவர்களுக்கான முன்னோடி கருத்தரங்கு "மாற்றத்திற்கான சிந்தனை" 2024, ஏப்ரல் 08 அன்று நடத்தப்பட்டது. பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் தலைமையில் மாற்றத்திற்கான சிந்தனை – 2, 2024 மே 09-10 தேதிகளில் புதுதில்லியில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

தலைமைப் பதவிநிலையில் உள்ள குழுவின் அனைத்து உப குழுக்களின் உறுப்பினர்கள்; சி.டி.எஸ் அதன் நிரந்தர தலைவர் என்ற முறையில் முப்படைகளின் தளபதி, மூன்று படைகளின்  தலைவர்கள் ஆகியோர் பல்வேறு களங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்வார்கள். மேலும் கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் விரும்பிய முடிவை எட்டுவதற்கு தேவையான சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசனை  மேற்கொள்வார்கள்.

****

ANU/SMB/KV/KR



(Release ID: 2020056) Visitor Counter : 69