மத்திய அமைச்சரவை

செயற்கை நுண்ணறிவு, புதுமைக் கண்டுபிடிப்பு சூழலை வலுப்படுத்துவதற்கான இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 07 MAR 2024 7:46PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை உருவாக்குதல் மற்றும் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுப் பணி என்ற தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில், 10,371.92 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீட்டில் விரிவான தேசிய அளவிலான இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கத்திற்கு மிஷனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கம் பொது மற்றும் தனியார் துறைகளில் உத்திசார்ந்த திட்டங்கள் மற்றும் கூட்டாண்மைகள் மூலம் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் ஒரு விரிவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும். கணினி அணுகலை பரவலாக்குவதன் மூலமும், தரவு தரத்தை மேம்படுத்துவதன் மூலமும், உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு திறன்களை வளர்ப்பதன் மூலமும், சிறந்த செயற்கை நுண்ணறிவு திறமைகளை ஈர்ப்பதன் மூலமும், தொழில்துறை ஒத்துழைப்பை செயல்படுத்துவதன் மூலமும், சமூக ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் செயற்கை நுண்ணறிவு திட்டங்களை உறுதி செய்வதன் மூலமும், நெறிமுறை செயற்கை நுண்ணறிவை ஊக்குவிப்பதன் மூலமும், இது இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழல் அமைப்பின் பொறுப்பான, உள்ளடக்கிய வளர்ச்சியை இயக்கும்.

***

AD/IR/RS/KRS



(Release ID: 2012436) Visitor Counter : 81