மத்திய அமைச்சரவை

பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயுத் திட்டத்தின் பயனாளிகளுக்கு ரூ.300 மானியத்தை தொடர்ந்து அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 07 MAR 2024 7:44PM by PIB Chennai

பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட பயனாளிகளுக்கு 2024-25-ம்  நிதியாண்டில் 14.2 கிலோ அளவிலான ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு  (மற்றும் 5 கிலோ சிலிண்டருக்கு விகிதாசார விகிதத்தில்) ரூ.300 மானியத்தை தொடர்ந்து அளிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  மார்ச் 1 ஆம் தேதி நிலவரப்படி, 2024 –ம் ஆண்டில் 10.27 கோடிக்கும் அதிகமான பிரதமரின் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டப் பயனாளிகள் உள்ளனர்.

இதன் மூலம் 2024-25-ம் நிதியாண்டில் மொத்த செலவு ரூ.12,000 கோடியாக இருக்கும்.  இந்த மானியம் தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2012353

***

 

AD/IR/RS/KRS



(Release ID: 2012405) Visitor Counter : 108