கூட்டுறவு அமைச்சகம்

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (NUCFDC) என்ற அமைப்பை புதுதில்லியில் தொடங்கி வைத்தார்


கூட்டுறவு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கான முயற்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது - திரு அமித் ஷா

Posted On: 02 MAR 2024 4:14PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான ஒருங்கிணைந்த அமைப்பான தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தை புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் திரு பி.எல்.வர்மா, கூட்டுறவுத் துறை செயலாளர் டாக்டர் ஆஷிஷ் குமார் பூதானி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, சுமார் 20 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, இன்று இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது என்றும், இது நம் அனைவருக்கும் மிகவும் சிறந்த நாள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் திரு நரேந்திர மோடி கூட்டுறவுத் துறைக்கு புத்துயிர் கொடுத்து, கூட்டுறவுக்கென தனி அமைச்சகத்தை உருவாக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். கூட்டுறவு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டில், வளர்ச்சியின் அளவுகோல் வெறும் எண்ணிக்கையாக மட்டும் இருக்கக்கூடாது என்றும், நாட்டின் வளர்ச்சியில் எத்தனை பேர் பங்கேற்கிறார்கள் என்ற அடிப்படையில் அதை மதிப்பிட வேண்டும் என்றும் திரு அமித் ஷா கூறினார்.

***

ANU/PLM/DL



(Release ID: 2010975) Visitor Counter : 62