நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி சரக்குப் போக்குவரத்து திட்டம், கொள்கையை மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி நாளை வெளியிடுகிறார்
Posted On:
28 FEB 2024 3:31PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நாளை (பிப்ரவரி 29) நிலக்கரி சரக்குப் போக்குவரத்து திட்டம், கொள்கையை மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி நாளை வெளியிடுகிறார்.
நித்தி ஆயோக், நிலக்கரி, ரயில்வே, மின்சாரம், எஃகு, சுரங்கங்கள், கப்பல், துறைமுகம், நீர்வழிகள் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள், நிலக்கரி, எஃகு, மின்சாரம் மற்றும் பிற துறைகளின் தொழில்துறைப் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
2030-ம் நிதியாண்டுக்குள் 1.5 பில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்காக நிலக்கரி அமைச்சகம் பல்வேறு முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, ஒருங்கிணைந்த, செலவு குறைந்த, நெகிழ்திறன் மிக்க, நீடித்த மற்றும் நம்பகமான சரக்கு போக்குவரத்து சூழலை உருவாக்குவதற்கான தொலைநோக்கு அணுகுமுறையுடன் ஒருங்கிணைந்த நிலக்கரி சரக்குப் போக்குவரத்து திட்டம் மற்றும் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம், தற்சார்பு இந்தியாவின் பார்வைக்கு ஏற்ப, 2030-ம் நிதியாண்டுக்குள் நிலக்கரித் துறைக்குள் விரைவான தேவை மற்றும் விநியோகத்தை ஊக்குவிப்பதை இந்த உத்திசார்ந்த கட்டமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
2030-ம் ஆண்டுக்குள் நிலக்கரி உற்பத்தியை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கும் இலக்குடன் இணைந்த வகையில், நிலக்கரி அமைச்சகம் நாடு முழுவதும் நிலக்கரி சரக்கு போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான விரிவான செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2009766
***
ANU/PKV/IR/AG/DL
(Release ID: 2009872)