உள்துறை அமைச்சகம்

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

Posted On: 09 FEB 2024 3:41PM by PIB Chennai

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

“சவுத்ரி சாஹேப்பை கவுரவிப்பதன் மூலம் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களை கவுரவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி. தமது வாழ்நாள் முழுவதும் விவசாயிகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சவுத்ரி சரண்சிங் அவர்கள், விவசாயிகளின் நலனுக்காக பல பணிகளை செய்துள்ளதாக கூறினார். சவுத்ரி சாஹேப் தமது வாழ்நாள் முழுவதும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் இருந்தார். அவசரநிலையை துணிச்சலுடன் எதிர்த்துப் போராடினார். நாட்டின் வாழ்வாதாரம் முதல் கொள்கை பிரச்சினைகள் வரை ஒரு விவசாயியின் மகனால் முடிவுகளை எடுக்க முடியும் என்பதை சவுத்ரி சரண் சிங் தனது முடிவுகளின் மூலம் நாடு முழுவதற்கும் காட்டினார்”.

-----

(Release ID: 2004436)

ANU/SMB/PKV/KPG/KRS



(Release ID: 2004637) Visitor Counter : 44