பிரதமர் அலுவலகம்

காசி தமிழ் சங்கமம் 2.0 தொடக்க விழாவில் பிரதமர் உரையின் தமிழாக்கம்

Posted On: 17 DEC 2023 9:33PM by PIB Chennai

ஹர ஹர மஹாதேவ்! வணக்கம் காசி. வணக்கம் தமிழ்நாடு!

தமிழகத்தில் இருந்து வருபவர்கள் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயர்போன்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேடையில் உள்ள உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள், காசி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிஞர்கள், தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு வந்துள்ள எனது சகோதர சகோதரிகள், மற்ற அனைத்து முக்கிய பிரமுகர்கள், பெண்கள் மற்றும் பெருமக்களே! நீங்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணித்து இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் காசிக்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் விருந்தினர்களாக இருப்பதை விட என் குடும்ப உறுப்பினர்களாக காசிக்கு வந்திருக்கிறீர்கள். காசி தமிழ் சங்கமத்திற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

என் குடும்ப உறுப்பினர்களே,

தமிழ்நாட்டிலிருந்து காசிக்கு வருவது என்பது மகாதேவரின் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு வருவது என்று பொருள்! தமிழகத்திலிருந்து காசிக்கு வருவது என்றால் மதுரை மீனாட்சியில் இருந்து காசி விசாலாட்சிக்கு வருவது. அதனால்தான் தமிழக மக்களுக்கும் காசி மக்களுக்கும் இடையே அவர்களின் இதயத்தில் இருக்கும் அன்பும் பிணைப்பும் வித்தியாசமானது, தனித்துவமானது. காசி மக்கள் உங்கள் அனைவருக்கும் சேவை செய்வதில் எதையும் விட்டுவிடமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் இந்த இடத்தை விட்டு வெளியேறும்போது, பாபா விஸ்வநாதரின் ஆசீர்வாதத்தைத் தவிர, காசியின் சுவை, காசியின் கலாச்சாரம் மற்றும் காசியின் நினைவுகளையும் உங்களுடன் எடுத்துச் செல்வீர்கள். இன்று, செயற்கை நுண்ணறிவு மூலம் தொழில்நுட்பத்தின் புதிய பயன்பாடும் இங்கு நிகழ்ந்துள்ளது. இது ஒரு புதிய தொடக்கம், இது என் வார்த்தைகளைப் புரிந்துகொள்வதை உங்களுக்கு எளிதாக்கியுள்ளது என்று நம்புகிறேன்.

என் குடும்ப உறுப்பினர்களே,

இன்று கன்னியாகுமரி- வாரணாசி தமிழ் சங்கமம் ரயில் இங்கிருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. திருக்குறள், மணிமேகலை மற்றும் பல தமிழ் நூல்களின் மொழிபெயர்ப்புகளை பல்வேறு மொழிகளில் வெளியிடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. ஒரு காலத்தில் காசியின் மாணவராக இருந்த சுப்பிரமணிய பாரதி அவர்களே, உச்சரிக்கப்படும் மந்திரங்களை தமிழகத்தின் காஞ்சி நகர மக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் கூறினார். இன்று சுப்பிரமணிய பாரதியின் ஆசை நிறைவேறுகிறது. காசி தமிழ் சங்கமத்தின் குரல் நாடு முழுவதும், உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்களுக்கும், உ.பி., அரசுக்கும், தமிழக மக்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் குடும்ப உறுப்பினர்களே,

கடந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் தொடங்கியதில் இருந்து, இந்த யாத்திரையில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். பல்வேறு மடங்களின் மதத் தலைவர்கள், மாணவர்கள், பல கலைஞர்கள், இலக்கியவாதிகள், கைவினைஞர்கள், தொழில் வல்லுநர்கள், பல துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தச் சங்கமத்தின் மூலம் பரஸ்பர தொடர்பு மற்றும் தகவல்தொடர்புக்கு ஒரு பயனுள்ள தளத்தைப் பெற்றுள்ளனர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும், சென்னை ஐ.ஐ.டி.யும் இணைந்து இந்தச் சங்கமத்தை வெற்றியடையச் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பனாரஸின் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதத்தில் ஆன்லைன் ஆதரவை வழங்க ஐ.ஐ.டி மெட்ராஸ் வித்யாசக்தி முயற்சியைத் தொடங்கியுள்ளது. காசிக்கும் தமிழகத்திற்கும் இடையிலான உறவு உணர்வுப்பூர்வமானது, ஆக்கப்பூர்வமானது என்பதற்கு ஓராண்டில் எடுக்கப்பட்ட பல முன்முயற்சிகள் சான்று.

என் குடும்ப உறுப்பினர்களே,

'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வைத் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நித்திய நீரோட்டமாக 'காசித் தமிழ் சங்கமம்' திகழ்கிறது. இதே சிந்தனையுடன், கங்கா புஷ்கரலு உற்சவம், அதாவது காசி-தெலுங்கு சங்கமம் சில காலத்திற்கு முன்பு காசியில் ஏற்பாடு செய்யப்பட்டது. குஜராத்தில் சௌராஷ்டிரா-தமிழ் சங்கமத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். நமது ஆளுநர் மாளிகைகளும் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற அற்புதமான முன்முயற்சிகளை எடுத்துள்ளன. இப்போது பிற மாநிலங்களின் நிறுவன தினம் ஆளுநர் மாளிகைகளில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பிற மாநிலத்தவர்களை வரவழைத்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன . ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வு புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழையும்போதும் தெரிந்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் புனித செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. ஆதீன முனிவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இதே செங்கோல் 1947 இல் அதிகார மாற்றத்தின் சின்னமாக மாறியது. ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வின் இந்த ஓட்டம்தான் இன்று நம் தேசத்தின் ஆன்மாவை நனைத்துக் கொண்டிருக்கிறது.

என் குடும்ப உறுப்பினர்களே,

இந்தியர்களாகிய நாம் ஒன்றாக இருந்தபோதிலும், பேச்சுவழக்குகள், மொழிகள், உடைகள், உணவு, வாழ்க்கை முறை ஆகியவற்றில் பன்முகத்தன்மை கொண்டவர்கள். பாரதத்தின் இந்த பன்முகத்தன்மை அந்த ஆன்மீக உணர்வில் வேரூன்றியிருக்கிறது, அதற்காக தமிழில் சொல்லப்படுகிறது. இந்த வாக்கியம் மாபெரும் பாண்டிய மன்னன் 'பராக்கிரம பாண்டியன்' என்பவரிடமிருந்து வந்தது. அதன் பொருள் எல்லா நீரும் கங்கை நீர், பாரதத்தில் உள்ள ஒவ்வொரு நிலமும் காசி.

நமது ஆன்மீகத் தலங்களும், காசியும் வடநாட்டு ஆக்கிரமிப்பாளர்களால் தாக்கப்பட்டபோது, காசியை அழிக்க முடியாது என்று கூறி தென்காசியிலும் சிவகாசியிலும் கோயில்களைக் கட்டினார் பராக்கிரம பாண்டியன். உலகில் எந்த நாகரிகத்தையும் பார்த்தால், ஆன்மீகத்தில் இவ்வளவு எளிமையான, உன்னதமான பன்முகத்தன்மையை எங்கும் காண முடியாது! சமீபத்தில் கூட, ஜி -20 உச்சிமாநாட்டின் போது, இந்தியாவின் இந்த பன்முகத்தன்மையைக் கண்டு உலகம் வியந்தது.

என் குடும்ப உறுப்பினர்களே,

உலகின் பிற நாடுகளில், ஒரு தேசத்திற்கு ஒரு அரசியல் வரையறை உள்ளது, ஆனால் ஒரு தேசமாக பாரதம் ஆன்மீக நம்பிக்கைகளால் ஆனது. ஆதி சங்கராச்சாரியார், ராமானுஜர் போன்ற முனிவர்கள் தங்கள் பயணங்களின் மூலம் பாரதத்தின் தேசிய உணர்வை எழுப்பியதால் பாரதம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்களும் பல நூற்றாண்டுகளாக காசி போன்ற சைவத் தலங்களுக்குச் சென்று வருகின்றனர். குமரகுருபரர் காசியில் மடங்களையும் கோயில்களையும் நிறுவினார். திருப்பனந்தாள் ஆதீனம் இவ்வூருடன் மிகவும் இணைந்திருப்பதால் இன்றும் 'காசி' என்ற பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அதுபோலவே, பாடல் பெற்ற தளம் பற்றிய தமிழ் ஆன்மிக இலக்கியங்கள், இதைச் செய்பவன் கேதாரிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்வான் என்று கூறுகிறது. இந்தப் பயணங்கள் மற்றும் யாத்திரைகள் மூலம், பாரதம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு தேசமாக உறுதியாகவும் நிரந்தரமாகவும் இருந்து வருகிறது.

காசி தமிழ் சங்கமம் மூலம், இந்தத் தொன்மையான பாரம்பரியத்தின் மீதான ஆர்வம் நாட்டு இளைஞர்களிடையே அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் இருந்து ஏராளமான மக்களும், இளைஞர்களும் காசிக்கு வந்து செல்கின்றனர். இங்கிருந்து பிரயாகை, அயோத்தி மற்றும் பிற யாத்திரைகளுக்கும் செல்கிறோம். காசி தமிழ் சங்கமத்திற்கு வருபவர்களுக்கு அயோத்தி தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ராமேஸ்வரத்திற்கு அஸ்திவாரம் அமைத்த மகாதேவர் மற்றும் ராமர் ஆகிய இருவரின் தரிசனமும் கிடைப்பது பெரும் அதிர்ஷ்டம்.

அதாவது, அறிவு நம்பிக்கையை அதிகரிக்கிறது, நம்பிக்கை அன்பை அதிகரிக்கிறது. எனவே, ஒருவருக்கொருவர், ஒருவருக்கொருவர் பாரம்பரியங்கள் மற்றும் நமது பொதுவான பாரம்பரியத்தைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம். வடக்கிலும் தெற்கிலும் காசி, மதுரை உதாரணங்கள் உள்ளன. இரண்டுமே பெரிய கோயில் நகரங்கள். இரண்டுமே சிறந்த யாத்ரீக ஸ்தலங்கள். வைகைக் கரையில் மதுரையும், கங்கைக் கரையில் காசியும் அமைந்துள்ளன. வைகை, கங்கை இரண்டையும் பற்றி தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. இந்த பாரம்பரியத்தைப் பற்றி நாம் அறியும்போது, நமது உறவுகளின் ஆழத்தையும் உணர்கிறோம்.

என் குடும்ப உறுப்பினர்கள்,

காசி-தமிழ் சங்கமத்தின் இந்த சங்கமம் நமது பாரம்பரியத்தை வலுப்படுத்தவும், 'ஒரே பாரதம், ஸ்ரேஷ்ட பாரத்' உணர்வை வலுப்படுத்தவும் தொடர்ந்து உதவும் என்று நான் நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் காசியில் இனிமையான தங்குமிடத்தை வாழ்த்தி எனது உரையை நிறைவு செய்கிறேன், அதே நேரத்தில், காசிக்கு வந்து நம் அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகர் ஸ்ரீராமுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை வாழ்த்துகிறேன். காசி மக்களும் தமிழ்ப் பாடகர் ஸ்ரீராமின் பேச்சைக் கேட்கும் பக்தியில் நமது ஒற்றுமையின் வலிமையைக் கண்டுகொண்டிருந்தனர். காசி-தமிழ் சங்கமத்தின் இந்த தொடர்ச்சியான பயணத்திற்கு மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!

***

(Release ID: 1987544)

ANU/PKV/AG/RR



(Release ID: 1988540) Visitor Counter : 80