தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

2023 அக்டோபர் மாதத்தில் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் 17.28 லட்சம் புதிய தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்

Posted On: 15 DEC 2023 11:35AM by PIB Chennai

தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகத்தின் தற்காலிக ஊதியத் தரவின்படி 2023 அக்டோபர் மாதத்தில் 17.28 லட்சம் புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

2023 அக்டோபர் மாதத்தில் சுமார் 23,468 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகத்தின் சமூக பாதுகாப்பு குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

2023 அக்டோபர் மாதத்தில் சேர்க்கப்பட்ட புதிய பதிவுகளில்  17.28 லட்சம் மொத்த ஊழியர்களில், 25 வயதிற்குட்பட்ட 8.25 லட்சம் ஊழியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர், இது மொத்த ஊழியர்களில் 47.76% ஆகும்.

ஊதிய தரவுகளின்படி பாலின வாரியான பகுப்பாய்வு, 2023 அக்டோபரில் பெண் உறுப்பினர்களின் நிகர சேர்க்கை 3.31 லட்சமாக இருப்பதைக் குறிக்கிறது.  2023 அக்டோபர் மாதத்தில் மொத்தம் 51 திருநங்கை ஊழியர்களும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர் என்று தரவு மூலம் தெரிய வருகிறது. இது சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதன் நன்மைகளை வழங்க இ.எஸ்.ஐ.சி உறுதிபூண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

தரவு உருவாக்கம் ஒரு தொடர்ச்சியான பயிற்சி என்பதால் சம்பளப் பட்டியல் தரவு தற்காலிகமானது.

***

(Release ID: 1986567)

ANU/PKV/BS/RR



(Release ID: 1986587) Visitor Counter : 58