பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை" பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் பொது சேவைகளை வழங்குவது ஜனநாயகமயமாக்கப்படுவதை பிரதிபலிக்கிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்

Posted On: 14 DEC 2023 5:47PM by PIB Chennai

"நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை" பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் பொது சேவைகளை வழங்குவது ஜனநாயகமயமாக்கப்படுவதை பிரதிபலிக்கிறது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்தார்.

தேசிய தொலைக்காட்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கடந்த ஒன்பது ஆண்டுகளில், மக்களின் நலனுக்காக பல முன்னோடித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், குறிப்பாக முந்தைய அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட பிரிவினரை இலக்காகக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.

நாட்டின் கடைக்கோடி மனிதரையும் அரசின் திட்டம் சென்றடைவதை பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

""நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை மூலம் , இப்போது, மத்திய அரசின் நலத்திட்டங்களின் பயன்களை  பெறுவதில் எவரும் விடுபடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக ஒரு அரசு இவ்வளவு பெரிய நடவடிக்கையை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்" என்று அவர் கூறினார்.

***

(Release ID: 1986357)

ANU/PKV/IR/AG/KRS


(Release ID: 1986438)