பிரதமர் அலுவலகம்

லச்சித் தினத்தை முன்னிட்டு லச்சித் போர்புகானின் தீரத்திற்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

Posted On: 24 NOV 2023 5:35PM by PIB Chennai

லச்சித் தினத்தை முன்னிட்டு லச்சித் போர்புகானின் தீரத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

லச்சித் தினமான இன்று, லச்சித் போர்புகானின் தைரியத்தை நாம் நினைவுகூர்கிறோம் என்று திரு. மோடி கூறியுள்ளார். சராய்கட் போரில் அவரது அசாதாரணமான தலைமை மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. அவரது பாரம்பரியம் நமது வரலாற்றை வடிவமைத்த வீரம் மற்றும் உத்திபூர்வமான மதிநுட்பம் காலத்தால் அழியாத சான்றாகும் என்று அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

லச்சித் தினமான இன்று நான் லச்சித் போர்புகானின் வீரத்தை நினைவுகூர்கிறேன். சராய்கட் போரில் அவரது சிறந்த தலைமை, தைரியம், கடமைக்கான அர்ப்பணிப்பு ஆகியவை வெளிப்பட்டன. அவர்களின் பாரம்பரியம் நமது வரலாற்றுக் கோட்டைகளான தைரியம், ராணுவ மதிநுட்பம் ஆகியவை காலத்தால் அழியாத சான்றுகளாகும்.

***

ANU/SMB/PKV/RR/KPG



(Release ID: 1979534) Visitor Counter : 96